எழுமாத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் செஞ்சுருள் மற்றும் செஞ்சிலுவை இளைஞர் சங்கமும் அறம் அறக்கட்டளை மற்றும் சி.கே.மெடிக்கல் சென்டர் ஹாஸ்பிடல் இணைந்து நடத்திய உயிர் காக்கும் முதலுதவி சிகிச்சையான CPR விழிப்புணர்வு நிகழ்ச்சி எழுமாத்தூர் அருகே அமைந்துள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. இக்கல்லூரியில் பயிலும் சுமார் 200 மாணவர்கள் கலந்து கொண்டு CPR பற்றி தெரிந்து கொண்டனர்.



