மொடக்குறிச்சி வட்டம், ஈஞ்சம்பள்ளி ஊராட்சி, PKP மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு அறம் அறக்கட்டளை சார்பாக இலவச மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. அறம் அறக்கட்டளையின் செயல் தலைவரும் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினரும் ஆகிய டாக்டர் சி. சரஸ்வதி அவர்கள் தலைமையில் மரக்கன்றுகள் வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்வில் மரக்கன்றுகளை சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் மாணவ மாணவியர்களுக்கு வழங்கி மரம் வளர்ப்பதன் அவசியம் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.







