மொடக்குறிச்சியில் அறம் அறக்கட்டளை சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கடந்த ஓராண்டாக இலவச நீட் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. இப்பயிற்சி வகுப்பில் படித்து நீட் (NEET) தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவ கல்லூரியில் சேர்ந்துள்ள,
வீரப்பன் சத்திரத்தை சேர்ந்த சுதர்சனா மற்றும் வெள்ளோட்டை சேர்ந்த கோகுல லட்சுமி ஆகிய இரண்டு மாணவிகளையும் கௌரவிக்கும் விதமாக இன்று அறம் அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனர் திருமதி.கிருத்திகா சிவ்குமார் அவர்களும், மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.சி.சரஸ்வதி அவர்களும் மாணவிகளின் இல்லத்திற்கு சென்று முதலாம் ஆண்டு புத்தக செலவிற்கான உதவித்தொகை வழங்கி கௌரவித்தனர்.

