வேலம்பாளையம் ஊராட்சி, குப்பையண்ணசுவாமி திருக்கோவிலில் நடைபெற்ற எழுமாத்தூர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களின் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாமை நமது சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி அவர்கள் துவக்கி வைத்தார்.ஏழு நாட்கள் வடுகபட்டி மற்றும் அரச்சலூர் பகுதிகளில் நடைபெறும் இம்முகாமில் கலந்து கொள்ளும் 150 மாணவர்களுக்கு “அறம் அறக்கட்டளை” சார்பில் தொப்பிகள் வழங்கப்பட்டது. மேலும் முகாம் நடைபெறும் நாட்களில் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கவும் அறம் அறக்கட்டளை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


