சிவகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளின் பாதுகாப்பு கருதி, கண்காணிப்பு கேமரா பொருத்தி தருமாறு நமது சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி.சரஸ்வதி அவர்களிடம் பள்ளியின் தலைமை ஆசிரியர் அளித்திருந்த மனுவின் அடிப்படையில்,நமது சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் அறம் அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் டாக்டர் ஷிவ்குமார் சின்னுசாமி அவர்கள் சார்பில் ரூபாய் 50 ஆயிரம் மதிப்பில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இன்று பயன்பாட்டுக்கு வந்தது.இந்நிகழ்ச்சியில் நமது சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி.சரஸ்வதி அவர்கள் மற்றும் அறம் அறக்கட்டளையின் நிறுவனத்தலைவர் டாக்டர்.ஷிவ்குமார் சின்னுசாமி அவர்கள் கலந்து கொண்டு கண்காணிப்பு கேமராவின் இயக்கத்தை தொடங்கி வைத்தார்கள்.



