ஈரோடு மாவட்டம், கொடுமுடி வட்டார ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் அலுவலகத்திற்கு உட்பட்ட குழந்தைகள் மையத்திற்கு வரும் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா கொடுமுடி ஒத்தக்கடையில் உள்ள ரம்யா மஹாலில் நடைபெற்றது. நமது அறம் அறக்கட்டளையின் இணைத் தலைவர் டாக்டர்.சி. சரஸ்வதி அவர்கள் விருந்தினராக கலந்துகொண்டு விழா பேருரை ஆற்றினார். நமது அறம் அறக்கட்டளையின் மூலம் கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது.








