அறம் அறக்கட்டளை நடத்திய இலவச கண் மருத்துவ முகாமின் மூலம் 11 பேருக்கு இலவச கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அச்சுதா ஐ கேர் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை முடிந்து திரும்பிய 11 பயனாளிகளையும் நானும், மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினரும் அறம் அறக்கட்டளையின் செயல் தலைவருமாகிய டாக்டர் சி. சரஸ்வதி அவர்களும் கொடுமுடி வட்டம், இச்சிப்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட வளந்தான் கோட்டை பகுதிக்கு நேரில் சென்று நலம் விசாரித்தோம்.




