பெருமாபாளையத்தில் உள்ள ஈஷா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாமை நமது சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி.சரஸ்வதி அவர்கள் துவக்கி வைத்தார். இம்முகாமில் அறம் அறக்கட்டளை டாக்டர்.C. ஷிவ்குமார் அவர்களால், ஈரோடு சி.கே. மெடிக்கல் சென்டர் மருத்துவமனை சார்பில், அனைத்து மாணவ மாணவியரின் இரத்த அழுத்தம், பெண் குழந்தைகளுக்கான ஆரோக்கியம், சர்க்கரை, இருதயம், மற்றும் சத்துக்குறைபாடுகள், கண் பார்வை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, அதற்குரிய ஆலோசனைகள், மருத்துவ உதவிகளும் இலவசமாக வழங்கப்பட்டது.
