அறம் அறக்கட்டளை மற்றும் ஈரோடு ஸ்பைஸ் ரவுண்டு டேபிள் 211 இணைந்து நடத்திய அறம் விதைப்போம் நிகழ்வு வெற்றியடைய செய்தமைக்கு உறுதுணையாக இருந்த உயிரின் சுவாசம் அமைப்புக்கும், தன்னார்வலர்களுக்கும், மாவட்ட பள்ளிக் கல்வித்துறைக்கும், பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.இந்த நிகழ்வின் மூலம் 40 ஆயிரம் மரக்கன்றுகள் பள்ளி குழந்தைகளுக்கும் 20 ஆயிரம் மரக்கன்றுகள் விவசாயிகளுக்கும், 30 லட்சம் விதைகளும் சென்றடைந்துள்ளது. இந்த கூட்டு முயற்சியானது மொடக்குறிச்சி தொகுதியின் சுற்றுச்சூழலில் ஒரு மாற்றத்தை உருவாக்கும் என்பது உறுதி.










