நமது அறம் அறக்கட்டளை சார்பாக அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்காக வருடா வருடம் இலவச நீட் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. 3வது ஆண்டுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இந்த ஆண்டில் சுமார் 60 மாணவர்கள் நீட் பயிற்சி வகுப்பில் கட்டணம் இன்றி படிக்கின்றனர். பயிற்சி பெறும் மாணவர்களை சந்தித்து நானும் நமது அறம் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் திரு.சிவ்குமார் சின்னசாமி அவர்களும் கலந்துரையாடிய பொழுது.




