ஈரோடு அறம் அறக்கட்டளையின் விதை அமைப்பு, CII-IWN (Indian Women Network), YI(Young Indians) ஆகியவற்றின் சார்பில் பொதுமக்களுக்கான விழிப்புணர்வு மற்றும் சுகாதார பராமரிப்பு முகாம் அனுமன்பள்ளியில் நடைபெற்றது. இம்முகாமில் ஈரோடு CK மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் சி.கே.சரஸ்வதி அவர்களின் ஆலோசனையின் பேரில் மருத்துவக் குழுவினர் பொதுமக்களுக்கு இரத்த அழுத்தம் , சர்க்கரை மற்றும் மகளிர் சம்மந்தமான பொது மருத்துவ பரிசோதனைகளையும், ஆலோசனைகளையும், மருந்துகளையும் வழங்கினர்.

